உதயப்பூர்
உதயப்பூர் | |
---|---|
நாடு | இந்தியா |
உதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமாகவும் விளங்குகிறது. முன்னர் இந்நகரம் இராஜபுத்திர குலத்தின் மேவார் இராச்சியத்தின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் கோட்டையுடன் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது. உதயப்பூரை நகரத்தை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிகாலத்தில் இராஜபுதனம் முகமையின் கீழ் உதய்பூர் இராச்சியம் சுதேச சமஸ்தானமாக 1947 இந்திய விடுதலை வரை இருந்தது.
இங்குள்ள ஏரிகள்:
- பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) - 1678 இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.
- பிச்சோலா ஏரி (Lake Pichola )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 தீவுகள் உள்ளன.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.