For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மார்வார் பிரதேசம்.

மார்வார் பிரதேசம்

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கில் உள்ள மார்வார் பிரதேசம்

மார்வார் பிரதேசம் அல்லது ஜோத்பூர் பிரதேசம் (Marwar (also called Jodhpur region) மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கில் தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. மரு என்ற சமசுகிருதச் சொல்லுக்கு பாலைவனம் என்று பொருள். இராஜஸ்தானி வட்டார வழக்கில் வாத் என்பதற்கு குறிப்பிட்ட பகுதி எனப்பொருளாகும். ஆங்கிலேயர்கள் இச்சொல்லை ஆங்கிலத்தில் இதனை மார்வார் என மொழிபெயர்த்துள்ளனர்.[1]1949-ஆம் ஆண்டு வரை மார்வார் பிரதேசம் ஜோத்பூர் இராச்சியத்தால் ஆளப்பட்டு வந்தது. மார்வார் பிரதேசத்தில் வாழும் மக்களை மார்வாடிகள் என்றும், அவர்கள் பேசும் மொழி மார்வாரி மொழி ஆகும்.

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சி காலத்தின் போது இராஜபுதனாவின் அனைத்து நிலப்பகுதியையும் விட அதிகமான நிலத்தை ஜோத்பூர் இராச்சியம் கொண்டிருந்தது. மார்வார் பிரதேசம் 23543 சதுர மைல் நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 44,73,759 ஆக இருந்தது. இது ஒரு தோராயமான மதிப்பாக £35,29,000 வருவாயைக் கொண்டிருந்தது. இதன் வணிகர்களான மார்வாடிகள் இந்தியா முழுவதிலும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

மார்வார் பிரதேசத்தின் மாவட்டங்கள்

[தொகு]

மார்வார் பிரதேசத்தில் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டம், ஜலோர் மாவட்டம், ஜோத்பூர் மாவட்டம், நாகவுர் மாவட்டம், பாலி மாவட்டப் பகுதிகள் உள்ளது.

எல்லைகள்

[தொகு]

மார்வார் பிரதேசத்தின் வடக்கில் ஜங்கலதேஷ் பிரதேசமும், வடகிழக்கில் தூந்தர் பிரதேசமும், கிழக்கில் அஜ்மீர் பிரதேசமும், தென்கிழக்கில் மேவார் பிரதேசமும், தெற்கில் கோத்வார் பிரதேசமும், தென்மேற்கில் சிந்து பிரதேசமும், மேற்கில் ஜெய்சல்மேரும் உள்ளது.

புவியியல்

[தொகு]

1901-இல் மார்வார் பிரதேசம் (ஜோத்பூர் சமஸ்தானம்) 93,424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது தார் பாலைவனத்தில் உள்ளது. ஆரவல்லி மலைத்தொடருக்கு வடமேற்கில் உள்ளது மார்வார் பிரதேசம். மார்வார் பிரதேசத்தில் அஜ்மீர் பிரதேசத்தில் உற்பத்தியாகும் லூனி ஆறு மார்வார் பிரதேசம் வழியாகப் பாய்ந்து, பின்னர் அது கட்ச் பாலைவனத்தில் மறைந்து விடுகிறது.[2]மார்வார் பிரதேசத்தின் மேற்கில் தார் பாலைவனம் உள்ளதால், மார்வார் பிரதேசம் ஆண்டு முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

வரலாறு

[தொகு]
மெகரங்கார் கோட்டை, ஜோத்பூர், இராஜஸ்தான்

கிபி ஆறாம் நூற்றாண்டு அல்லது ஏழாம் நூற்றாண்டில் மார்வார் பிரதேச மக்கள் தங்களை கூர்ஜர தேசத்தவர்கள் எனக்கூறிக்கொண்டதாக சீன யாத்திரிகர் யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.[3] கூர்ஜர-பிரதிகார வம்சத்தினர்[4] கிபி 6-ஆம் நூற்றாண்டில் மார்வார் பகுதியில் இராச்சியத்தை அமைத்து மந்தோர் நகரத்தை தங்கள் தலைநகராக நிறுவினர்.[5]கூர்ஜரா - பிரதிகாரப் பேரரசின் ஒரு பகுதியான மார்வார் பிரதேசம் 1100 வரை வலிமை மிக்க பார்குஜார் அரசர்களால் ஆளப்பட்டு வந்தது.

1459 ஆம் ஆண்டில் ராத்தோர் வம்ச இராசபுத்திர தளபதி ராவ் ஜோதா ஜோத்பூரை உருவாக்கினார். ஜோத்பூரை சுற்றியுள்ள அனைத்து ஆட்சி பரப்புகளையும் மன்னர் இராவ் ஜோதா வெற்றிகொண்டார். பின்னர் மார்வார் இராச்சியத்தை நிறுவினார். இராவ் ஜோதா அருகில் இருந்த நகரமான மேண்ட்ரோவைச் சேர்ந்தவர் ஆவார். தொடக்கத்தில் மாநிலத்தின் தலைநகரமாக இந்த நகரம் கருதப்பட்டது. எனினும் ராவ் ஜோதா காலத்திலேயே விரைவில் ஜோத்பூர் தலைநகரானது. தில்லியிலிருந்து குஜராத்திற்கு செல்லும் முக்கிய சாலை இணையும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. அபின், செம்பு, பட்டு, மிதியடிகள், ஈச்ச மரங்கள் மற்றும் காஃபி போன்ற பொருட்களின் வர்த்தகம் இந்நகரின் முக்கிய வருவாயாக இருக்கிறது.

இந்த வரலாற்று காலத்தின் போது மகாராஜா ஜஸ்வந்த் சிங் போன்ற பல்வேறு சிறப்புமிக்க தளபதிகளுடன் இந்த மாநிலத்தை முகலாயர்கள் அளித்தனர். உலகில் ஜோத்பூரின் பிரபலத்தின் காரணமாக அந்நகரம் மற்றும் அதன் மக்கள் பயனடைந்தனர். கலை மற்றும் கட்டடக்கலையின் புதிய பாணிகளின் மூலம் உள்ளூர் வர்த்தகர்களுக்கு அவர்கள் தோற்றம் மற்றும் வாய்ப்புகளை வழங்கினர். இதன் மூலம் இந்தியா முழுவதும் அவர்களது அடையாளத்தை ஏற்படுத்தினர்.

மார்வார் பிரதேசத்தை அவுரங்கசீப் (1679) குறிப்பாக இசுலாமிய மௌலிகளின் போலிக் காரணங்களால் முகலாயப் பேரரசின் இணைத்துக் கொண்டார். ஆனால் 1707 ஆம் ஆண்டில் ஒளரங்கசீப் இறந்த பிறகு மார்வாரின் ஜோத்பூர் இராச்சியம் மீண்டும் சுதந்திர நாடாகியது. பின்னர் மராத்தியப் பேரரசின் 1707 ஆம் ஆண்டுக்குப் பிறகு முகலாயப் பேரரசு படிப்படியாக சரியத்தொடங்கியது. ஆனால் உட்சதியால் சோத்பூர் நீதிமன்றத்திற்கு தீங்கிழைக்கப்பட்டது. ஆனால் இந்த சூழ்நிலைகளில் இருந்து ஆதாயமடையும் நோக்கில் நிலக்கிழார்களாக அப்பிரதேசத்தை ஆக்கிரமித்த முகலாயர்கள் மார்வார் வழிவந்தவர்களின் சச்சரவுகளையும் மற்றும் மராத்தாக்களின் குறிக்கீடையும் வரவேற்றனர். எனினும் நிலைப்புத் தன்மை மற்றும் அமைதிக்காக இது ஏற்படுத்தப்படவில்லை. 50 ஆண்டுகாலப் போர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மாநிலத்தின் செல்வத்தை சீரழித்தன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு 1818 ஆம் ஆண்டில் ஆங்கிலேயருடன் நேச நாடுகளும் படையெடுத்து வந்தன.

ஜோத்பூரின் மகாராஜா ஆட்சி செய்து வந்த கோர்வார் பிரதேசத்தின் மீது ஓஸ்வல் ஜெயின்கள் கவனம் செலுத்தினர். மேலும் ஓஸ்வல் ஜெயின்கள் அதிகப்படியான செல்வத்தை மற்றும் இரத்தினக் கற்களை ஜோத்பூரின் மகாராஜாவிற்கு நன்கொடையளித்ததன் மூலம் ஜோத்பூரின் வலிமையான அஸ்திவாரத்திற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். மேலும் செல்வ வளமிக்க ஓஸ்வல் ஜெயின் வணிகர்களை நாகர் செத் அல்லது பல்வேறு பிற கெளரவமான தலைப்புகளில் அழைத்து கெளரவிப்பதற்கு சோத்பூர் மகாராஜா இதனைப் பயன்படுத்துகிறார்.

ஜோத்பூர் இராச்சியம் கிபி 1226 முதல் 1817 வரை சுதந்திர முடியாட்சியுடனும்; பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் படி பிரித்தானியர்களுக்கு அடங்கி, கப்பம் செலுத்தும் சமஸ்தானமாக ஜோத்பூர் இராச்சியத்தினர் 1818-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்தனர். 15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 6 ஏப்ரல் 1949 இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[6].

மார்வாரி குதிரைகள்

[தொகு]

மார்வார் பிரதேசத்தின் மார்வாரிக் குதிரைகள் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dr D K Taknet: Marwari Samaj aur Brij Mohan Birla, Indian Institute of Marwari Entrepreneurship, Jaipur, 1993, p. 20
  2. "Imperial Gazetteer2 of India, Volume 16, page 211 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.
  3. Satya Prakash; Vijai Shankar Śrivastava (1981). Cultural contours of India: Dr. Satya Prakash felicitation volume. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780391023581.
  4. Panchānana Rāya (1939). A historical review of Hindu India: 300 B. C. to 1200 A. D. I. M. H. Press. p. 125.
  5. "Archived copy". Archived from the original on 16 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-26.((cite web)): CS1 maint: archived copy as title (link)
  6. http://en.wikipedia.org/wiki/Political_integration_of_India#Border_states

வெளி இணைப்புகள்

[தொகு]


{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மார்வார் பிரதேசம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?