வலைவாசல்:கண்டி
தொகு
கண்டி - அறிமுகம்கண்டி (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும். தொகு
சிறப்புக் கட்டுரை
பேராதனை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் பெருந்தெருவில் கண்டி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கரையில் அமைந்திருந்த இந்நகரம் 2006 கடைசிப்பகுதியில் நகரில் ஏற்பட்ட தொடர் மண்சரிவுகள் காரணமாக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை தாவரவியற் பூங்கா என்பன இங்கு அமைந்துள்ளன.
தொகு
உங்களுக்குத் தெரியுமா?வலைவாசல்:கண்டி/தகவல்கள்/1 தொகு
பகுப்புகள்தொகு
செய்திகள்இந்த நாள், இனிய நாள்
தொகு
விக்கித் திட்டங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கண்டி
தொகு
நீங்களும் பங்களிக்கலாம்
தொகு
சிறப்புப் படம்தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.
தொகு
தொடர்புடைய வலைவாசல்கள்
தொகு
விக்கிமீடிய திட்டங்கள்
கண்டி விக்கிசெய்திகளில்
கண்டி விக்கிமேற்கோள்களில்
கண்டி விக்கிநூல்களில்
கண்டி விக்கிமூலத்தில்
கண்டி விக்சனரியில்
கண்டி விக்கிப்பொதுவில்
செய்தி
மேற்கோள்கள்
நூல்கள்
மூல ஆவணங்கள்
அகரமுதலி
ஊடகம்
வலைவாசல் என்றால் என்ன? · · வலைவாசல்களை அமைப்பது எப்படி?
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.